சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 3 சட்ட மசோதாக்கள் – ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!

Estimated read time 0 min read

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 3 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பதவிக் காலத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்கும் சட்ட மசோதா, தமிழ்நாடு ஊராட்சிகள் ஐந்தாம் திருத்தச் சட்ட மசோதா மற்றும் தமிழ்நாடு தொழிற்கல்வி நிலையங்களில் சேர்க்கை திருத்தச் சட்ட மசோதாக்கள் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டன

தொடர்ந்து இந்த மூன்று சட்ட மசோதாக்களும் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. இந்த மூன்று சட்ட மசோதாக்களுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

கடந்த மாதம் 9 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த நிலையில், தற்போது மேலும் 3 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author