பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரு வெற்றி பெற்ற நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட், வாக்குப்பதிவின்போது பெண்களுக்கு ₹10,000 வழங்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன், தேர்தல் ஆணையம் இதை மௌன சாட்சியாக வேடிக்கை பார்த்ததாக அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மைக்கும் அப்பால் 200 தொகுதிகளுக்கும் மேல் ஆதிக்கம் செலுத்துகிறது.
இதில் பாஜக 91 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 79 இடங்களிலும் முன்னிலை வகித்தது.
மறுபுறம், மகாகத்பந்தன் (Mahagathbandhan) கூட்டணியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 27 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும் மட்டுமே முன்னிலை வகித்தது.
பீகார் வாக்குப் பதிவு சமயத்திலும் ரூ.10,000 வழங்கப்பட்டதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு
