பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு!

பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டனாவோ (Mindanao) நகரில், இன்று 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கம் மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்ஸில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மிண்டானாவோ பகுதியில் மதியம் 2.41 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கம், 140 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் மிண்டானாவோ மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உணரப்பட்டன.

இந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல் வெளியாகவில்லை.

Please follow and like us:

You May Also Like

More From Author