பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ‘நாட்டின் சமூக – கலாச்சார மற்றும் ஆன்மிகத்தில் ஒரு மகத்தான தருணத்தைக் குறிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 25 அன்று உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜன்மபூமி கோயிலுக்குச் செல்கிறார்.
அன்று காலை 10 மணியளவில், அங்கு மஹரிஷி வசிஷ்டர், மஹரிஷி விஸ்வாமித்திரர், மஹரிஷி அகத்தியர், மஹரிஷி வால்மீகி, தேவி அஹில்யா, நிஷாத்ராஜ் குகன், அன்னை சபரி ஆகியோருக்காக கட்டப்பட்டுள்ள ஏழு கோயில்களுக்குச் சென்று பிரதமர் தரிசனம் செய்கிறார். இதைத் தொடர்ந்து, அவர் சேஷாவதார் கோயிலுக்குச் செல்கிறார்.
காலை 11 மணியளவில், பிரதமர் அன்னை அன்னபூர்ணா தேவி கோயிலுக்குச் செல்கிறார். இதனையடுத்து, அவர் ராம் தர்பார் கர்ப்பக் கிரஹத்தில் தரிசனம் செய்து, பூஜையில் ஈடுபடுகிறார். அதனைத் தொடர்ந்து, குழந்தை ராமர் கர்ப்பக் கிரஹத்தில் அவர் தரிசனம் செய்கிறார்.
நண்பகல் 12 மணியளவில், அயோத்தியில் உள்ள புனிதமான ஸ்ரீ ராம ஜன்மபூமி கோயிலின் சிகரத்தில் பிரதமர் மோடி, சம்பிரதாய ரீதியாக காவிக் கொடியை ஏற்றி வைக்கிறார். இது கோயிலின் கட்டுமானம் நிறைவடைவதையும், கலாச்சார கொண்டாட்டம் மற்றும் தேசிய ஒற்றுமையின் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளதையும் குறிப்பதாக அமையும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் தருணத்தில் பிரதமர் அங்கு கூடியிருக்கும் மக்களிடையே உரையாற்றுகிறார்.
இறைவனின் செயல்களைக் குறிக்கும் வகையில், ஸ்ரீ ராமர் மற்றும் அன்னை சீதா ஆகியோரின் விவாஹ பஞ்சமித் திதியுடன் அபிஜித் முகூர்த்தமும் ஒன்றாக வரும் மார்கழி மாதத்தின் சுக்ல பக்ஷ சுபதினமான பஞ்சமி திதியில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. 17-ம் நூற்றாண்டில், 48 மணி நேரம் அயோத்தியில் தியானம் செய்த சீக்கியர்களின் ஒன்பதாவது மத குருவான குரு தேக் பகதூரின் தியாக தினத்தையும் குறிக்கும் வகையில், இத்தினம் அமைந்துள்ளது. இது அன்றைய தினத்தின் ஆன்மீக முக்கியத்துவத்தை மேலும் உயர்த்துவதாக உள்ளது.
பத்து அடி உயரமும், இருபது அடி நீளமும் கொண்ட இந்த செங்கோண அமைப்பிலான முக்கோணக் கொடி, பகவான் ஸ்ரீ ராமரின் பிரகாசத்தையும், வீரத்தையும் பிரதிபலிக்கும் வகையில் ஒளிரும் சூரியனின் உருவத்தைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், கோவிதார மரத்தின் படத்துடன் ‘ஓம்’ என்ற குறியீடும் அதில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த புனிதமான காவி கொடி, ராம ராஜ்யத்தின் லட்சியங்களை உள்ளடக்கிய கண்ணியம், ஒற்றுமை மற்றும் கலாச்சாரத் தொடர்ச்சி போன்ற அம்சங்களை செய்தியாகச் சுமந்து செல்லும்.
பாரம்பரிய வட இந்திய நாகரா கட்டிடக்கலைப் பாணியில் கட்டப்பட்ட இக்கோயில் சிகரத்தின் உச்சியில், இந்தக் கொடி ஏற்றப்படும். கோயிலைச் சுற்றிக் கட்டப்பட்டுள்ள, தென்னிந்தியக் கட்டிடக்கலைப் பாரம்பரியத்தில் வடிவமைக்கப்பட்ட, 800 மீட்டர் சுற்றளவு கொண்ட சுற்றுச் சுவர், கோயிலின் கட்டிடக்கலை பன்முகத்தன்மையை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
கோயிலின் பிரதான வெளிப்புறச் சுவர்களில், வால்மீகி ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட பகவான் ஸ்ரீ ராமரின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து எடுக்கப்பட்ட 87 நிகழ்வுகள், கற்களில் நுணுக்கமாகச் செதுக்கப்பட்டுள்ளன. மேலும், சுற்றுச் சுவர்களின் அருகே இந்தியக் கலாச்சாரத்திலிருந்து எடுக்கப்பட்ட 79 வெண்கல வார்ப்பினாலான காட்சி அமைப்புக்களும் கோயில் வளாகத்தில் இடம்பெற்றுள்ளன.
இந்த அம்சங்கள் அனைத்தும் இணைந்து, பார்வையாளர்கள் அனைவருக்கும் பகவான் ஸ்ரீ ராமரின் வாழ்க்கை வரலாறு மற்றும் இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம் குறித்த ஆழமான நுண்ணறிவை அளிப்பதுடன், ஒரு பயனுள்ள மற்றும் கல்வி சார்ந்த அனுபவத்தையும் வழங்குகின்றன’ என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல மென்பொருள் நிறுவனமான சோஹோ (Zoho) நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, அமெரிக்காவில் குடியேறியுள்ள இந்தியர்களுக்கு எழுதியுள்ள ஒரு பகிரங்க கடிதம் இணையத்தில் பெரும் விவாதத்தை [மேலும்…]
மகாராஷ்டிராவில் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் மராத்தி மொழி பேசுவது கட்டாயம் என அம்மாநில அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த முடிவுக்கு வடமாநிலங்களைச் சேர்ந்த [மேலும்…]
சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி சித்ரா பவுர்ணமி வருகிற 30-ந் தேதி (வியாழக்கிழமை) இரவு 9.52 [மேலும்…]
மேற்கு வங்காளம் : சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 23, 2026 அன்று 147 தொகுதிகளில் நடைபெற்று முடிந்துள்ளது. இரண்டாவது கட்ட [மேலும்…]
இந்தியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு இடையிலான வரலாற்று சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்(FTA) இன்று புது தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் முறைப்படி கையெழுத்தாகிறது. [மேலும்…]
ஆசியாவின் நீர் கோபுரம் என்று அழைக்கப்படும் இந்து குஷ் இமயமலைப் பகுதியில், கடந்த 23 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குப் பனிப்பொழிவு மிகக் குறைவாகப் பதிவாகியுள்ளது. [மேலும்…]
ஜப்பானின் வடக்குப்பகுதியான ஹொக்கைடோ தீவில் இன்று (ஏப்ரல் 27, 2026) அதிகாலை ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும், [மேலும்…]
மேஷம்: இன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். புதிய ஆர்டர்கள் தொடர்பாக அலையும்படி இருந்தாலும் சாதகமாக முடியும். பணவரத்து திருப்தி [மேலும்…]