“டிட்வா” புயல் எதிரொலி – புதுச்சேரி மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!

Estimated read time 0 min read

கனமழை எச்சரிக்கை காரணமாகப் புதுச்சேரியில் நாளையும், நாளை மறுநாளும் பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாமென மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.

“டிட்வா” புயல் எதிரொலியால் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையினர், புதுச்சேரிக்கு விரைந்துள்ளனர். அவர்களுடன் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், ஆலோசனை நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “டிட்வா” புயலை எதிர்கொள்ளப் புதுச்சேரி மாவட்ட நிர்வாகம், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

புதுச்சேரியில், புயல் பாதிப்பு ஏற்படும் 70 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், மீட்பு பணிகளுக்காக மின் மோட்டார்கள் மற்றும் 40 ஜேசிபி இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

You May Also Like

More From Author