இலங்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கியுள்ளன.
வங்க கடலில் உருவான டிட்வா புயல் காரணமாக, இலங்கையில் வரலாறு காணாத கனமழை பொழிந்தது.
இதனால் கம்பளை, மட்டக்களப்பு, வவுனியா, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் கடும் சேதத்தைச் சந்தித்தன.
கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 200-க்கும் மேற்பட்டோர் மாயமாகினர்.
மழை நின்று வெள்ளம் வடிய தொடங்கியுள்ளதால் இலங்கை இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது.
