தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கும், மாணவ பருவத்தினருக்கும் ஜனநாயக நடைமுறைகள் மற்றும் தேர்தல் விழிப்புணர்வு குறித்த புரிதல் மிக குறைவாக இருப்பதாக எழுந்துள்ள விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பள்ளிக்கல்வித் துறை ஒரு அசத்தலான புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது.
நடப்பு கல்வி ஆண்டு முதல் அரசுப் பள்ளிகளில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் ‘மகிழ் முற்றம்’ திட்டத்தின் கீழ், முதன்முறையாக ‘மாணவர் நாடாளுமன்றம்’ உருவாக்கப்பட்டு, அதற்கான ஜனநாயக ரீதியிலான பொதுத் தேர்தல்கள் அடுத்த மாதம் நடத்தப்படவுள்ளன.
தமிழக அரசு பள்ளிகளில் புதிய வரலாற்று தொடக்கம்: ஜூலை முதல் ‘மாணவர் நாடாளுமன்ற தேர்தல்’ அறிமுகம்
