பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு இ-மெயில் மூலம் அனுப்பி உள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-
மதிப்பிற்குரியவர்களுக்கு,
வணக்கம்! பொங்கல் திருநாளை முன்னிட்டு தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மனிதனின் உழைப்பிற்கும், இயற்கையின் இசைவிற்கும் இடையே உள்ள நெருங்கிய தொடர்பை இந்த சிறப்புவாய்ந்த பண்டிகை நமக்கு நினைவூட்டுகிறது. வேளாண்மை, கடினமாக உழைக்கும் நமது விவசாயிகள், கிராமப்புற வாழ்க்கைமுறை மற்றும் கண்ணியமான வேலை ஆகியவற்றுடன் இந்தப் பண்டிகை ஆழமாக பிணைந்துள்ளது.
குடும்பத்தினர் ஒன்றிணைந்து, பாரம்பரிய உணவுகளை சமைத்து, மகிழ்ச்சியையும் அன்பையும் பகிர்ந்து கொள்கின்றனர். இதன் மூலம், தலைமுறைகளைக் கடந்து, உறவுகள் வலுப்பெறுவதுடன், ஒற்றுமை உணர்வு மேலோங்குகிறது. தங்களது கடின உழைப்பின் மூலம் நமது வாழ்க்கையை செம்மைப்படுத்துவோருக்கு நன்றி தெரிவிக்கும் திருநாளாகவும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
வளமான தமிழ் பாரம்பரியங்களின் உன்னதமான அடையாளமாக பொங்கல் பண்டிகை திகழ்கிறது. உலகின் பழமையான மொழியான தமிழின் தாயகமாக இந்தியா திகழ்வதில் நாம் பெருமிதம் கொள்கிறோம்.
பொங்கல் பண்டிகை, சர்வதேசத் திருவிழாவாகக் கொண்டாடப்படுவது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களாலும் இந்தப் பண்டிகை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.
மீண்டும் உங்களுக்கு இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தைத்திருநாள், அனைவரின் வாழ்விலும் அபரிமிதமான செழிப்பு, வெற்றி மற்றும் நல்ல ஆரோக்கியத்தை கொண்டுவரட்டும்.
இதய நோய் சிகிச்சையில் ஒரு மாபெரும் திருப்புமுனையாக, உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் (LDL) கணிசமாகக் குறைக்கும் லிப்ஃபெண்ட்ரா என்ற புதிய மாத்திரைக்கு அமெரிக்க [மேலும்…]
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் விலை நிலவரத்திற்கு தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படும் நிலையில் கடந்த [மேலும்…]
பிரான்ஸிடம் 114 ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்வது தொடர்பாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அனுப்பிய கடிதத்துக்கு ஆகஸ்ட் 2-ஆவது வாரத்தில் அந்நாடு பதிலளிக்கும் [மேலும்…]
இந்துக்களின் மத உணர்விற்கு மதிப்பளித்து கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் வலியுறுத்தியுள்ளார். நெல்லை [மேலும்…]
தீப்பெட்டிகளைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட ஆக்கப்பூர்வமான வருகைப் பதிவுப் பலகை மூலம், தொடக்கப் பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவர்களின் வருகையைக் கணிக்கும் விதம் சமூக வலைத்தளங்களில் [மேலும்…]
தமிழகத்தில் நடப்பாண்டில் 2-வது முறையாக தனியார் பால் நிறுவனங்கள் பால், தயிர் விலையை உயர்த்தியுள்ளன. அமிர்தா, திருமலா, ஜெர்சி, ஹெரிடேஜ், வேதா, சக்ரா நிறுவனங்களின் [மேலும்…]
வார இறுதி இடைவேளைக்கு பிறகு இன்று மீண்டும் கூடவுள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர், நீட் வினாத்தாள் கசிவு, மாணவர்கள் மீதான டெல்லி காவல்துறையின் தடியடி [மேலும்…]
கிளாஸ்கோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இந்தியாவிற்குப் பெருமை சேர்க்கும் வகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த திறமையான வீரர் ராஜா முத்துப்பாண்டி [மேலும்…]