தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை வாசிக்கப்படாமல் ஆர்.என். ரவி வெளியேற்றம்  

Estimated read time 1 min read

தமிழக சட்டப்பேரவையின் 2026-ஆம் ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் இன்று காலை 9:30 மணிக்குத் தொடங்கிய நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவி தனது உரையை வாசிக்காமல் அவையிலிருந்து வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இந்த நிகழ்வு அரசியல் வட்டாரங்களில் அனலை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கம்போல தமிழ்த்தாய் வாழ்த்துடன் அவை நடவடிக்கைகள் தொடங்கின.
அதன் பின்னர் ஆளுநர் தனது உரையை வாசிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அவையின் தொடக்கத்திலேயே தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர், உரையை வாசிக்க மறுப்புத் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author