புதுடெல்லியில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற 2வது இந்தியா – அரபு வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் (IAFMM), 22 அரபு லீக் நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அரபு நாடுகள் இந்தியாவின் “விரிவாக்கப்பட்ட அண்டை நாடுகள்” (Extended Neighbourhood) என்றும், இரு தரப்பிற்கும் இடையே ஆழமான நாகரீகப் பிணைப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
தொழில்நுட்பம், எரிசக்தி மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லத் தயார் என அவர் உறுதியளித்தார்.
பாலஸ்தீனத்திற்கு இந்தியாவின் ஆதரவு தொடரும்: பிரதமர் மோடி உறுதி
