வேளாண் பொருள் வர்த்தகம், சுமுகமாகவும் தொடர்ச்சியாகவும் வளர்வதையும், வர்த்தகத்துக்கும் உற்பத்திக்குமிடையில் சீரான சுழற்சியையும் சீனா முன்னெடுக்கும் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய நிதி ஆணைய அலுவலகம் மற்றும் கிராமப்புற பணிகளின் தலைமை அலுவலகத்தின் தொடர்புடைய பொறுப்பாளர் ஹான் வென்ஷியு அண்மையில் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், உலகின் 2வது பெரிய வேளாண் பொருட்கள் இறக்குமதி நாடாக சீனா திகழ்கிறது. தேசிய தானிய பாதுகாப்பை உறுதிப்படுத்தியதோடு, வெளிநாட்டு வேளாண் பொருட்களை சீனா ஆக்கப்பூர்வமாக இறக்குமதி செய்து வருகிறது. 2025ம் ஆண்டில் வேளாண் இறக்குமதி தொகை, 20 ஆயிரத்து 740 கோடி டாலரை எட்டியது. சோயா அவரை, இறைச்சி, பால் பொருட்கள் முதலிய இறக்குமதி பொருட்கள், சீனர்களின் உணவு வகைகளைச் செழிப்பாக்கியுள்ளன. உலகின் பல வளரும் நாடுகளுக்கும் வளர்ந்த நாடுகளுக்கும் சீனா பரந்த சந்தையை வழங்கியுள்ளது என்று அவர் அறிமுகப்படுத்தினார்.
படம்:VCG
