இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா அதிக ரன்களை விட்டுக்கொடுத்து மோசமான சாதனை படைத்துள்ளார்.
எட்ஜ்பாஸ்டன் டெஸ்டின் 3வது நாளில், பிரசித் ஒரே ஓவரில் 23 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
இதன் மூலம் டெஸ்ட் வரலாற்றில் ஒரு ஒரு ஓவரில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த இந்திய வீரர்களில் ரவீந்திர ஜடேஜாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் ஜேமி ஸ்மித் இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸின் 32வது ஓவரில் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சை சிதறடித்து நான்கு பவுண்டரிகள், ஒரு பெரிய சிக்ஸர் மற்றும் ஒரு வைடு என அந்த ஓவரில் 23 ரன்கள் எடுத்தார்.
அதிக ரன்களை விட்டுக்கொடுத்த ஜடேஜாவின் மோசமான சாதனையை சமன் செய்தார் பிரஷித் கிருஷ்ணா
