ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், செவ்வாய் கிரகத்தில் மனித குடியேற்றத்தை அமைப்பதை விட, நிலவில் ஒரு “சுயமாக வளரும் நகரத்தை” உருவாக்குவதே வேகமான மற்றும் யதார்த்தமான இலக்கு என்று அறிவித்துள்ளது.
எக்ஸ் (X) தளத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள எலான் மஸ்க், நிலவில் நகரம் அமைக்கும் பணியை பத்து ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் சாதிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
செவ்வாய் கிரக திட்டங்கள் நீண்ட கால இலக்காக தொடர்ந்தாலும், தற்போதைய முன்னுரிமை நிலவுக்கே அளிக்கப்படுகிறது என்று மஸ்க் விளக்கியுள்ளார்.
நிலவில் ‘Self-growing City’ உருவாக்க போவதாக எலான் மஸ்க் அறிவிப்பு
