தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக கூட்டணிக்கு ஆதரவு பெருகி வரும் நிலையில், ‘மருது சேனை சங்கம்’ அதிமுகவிற்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, அந்த அமைப்பின் நிறுவனத் தலைவர் ஆதிநாராயணன் நேரில் சந்தித்துப் பேசினார்.
நிர்வாகிகளுடன் வந்த அவருக்கு எடப்பாடி பழனிசாமி உற்சாக வரவேற்பு அளித்ததைத் தொடர்ந்து, தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவளிப்பதற்கான அதிகாரப்பூர்வ கடிதம் அவரிடம் வழங்கப்பட்டது.
