தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அவர்களை, பப்புவா நியூ கினியா நாட்டின் வர்த்தக ஆணையர் டாக்டர் ஆர்.சி.எம். விஷ்ணுபிரபு நேரில் சந்தித்துத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற பிரம்மாண்ட பதவியேற்பு விழாவுக்குப் பிறகு, தலைமைச் செயலகத்தில் இந்த முக்கியமான சந்திப்பு அரங்கேறியது. இந்தச் சந்திப்பின் போது, பப்புவா நியூ கினியா நாட்டின் இயற்கை வளங்கள் குறித்தும், அந்த நாட்டுடன் தமிழ்நாடு இணைந்து செயல்படக்கூடிய வர்த்தக வாய்ப்புகள் குறித்தும் முதலமைச்சரிடம் விஷ்ணுபிரபு விரிவாக எடுத்துரைத்தார்.
மேலும், பப்புவா நியூ கினியா நாட்டிற்கு ஒருமுறை அரசுமுறைப் பயணமாக வருமாறு முதலமைச்சர் விஜய்க்கு அவர் அன்புடன் அழைப்பு விடுத்தார். இந்தத் திடீர் சந்திப்பு மற்றும் வெளிநாட்டுத் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகள், தமிழகத்தின் தொழில் மற்றும் வர்த்தகத் துறையில் புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. முதலமைச்சராகப் பொறுப்பேற்ற உடனேயே சர்வதேச அளவிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்த விஜய் காட்டும் இந்த ஆர்வம், அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
