இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $725.7 பில்லியனாக உயர்வு: புதிய வரலாற்று சாதனை  

Estimated read time 0 min read

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு பிப்ரவரி 13 உடன் முடிவடைந்த வாரத்தில், முன்னெப்போதும் இல்லாத வகையில் $725.727 பில்லியன் என்ற புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது.
இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரே வாரத்தில் கையிருப்பு $8.663 பில்லியன் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த ஜனவரி மாதம் எட்டப்பட்ட $723.774 பில்லியன் என்பதே அதிகபட்ச சாதனையாக இருந்தது.
இந்த உயர்வுக்குத் தங்கத்தின் மதிப்பு அதிகரித்ததும், வெளிநாட்டு கரன்சி சொத்துக்களின் உயர்வும் முக்கிய காரணங்களாகும்.
ஒரே வாரத்தில் தங்கத்தின் மதிப்பு $4.99 பில்லியன் உயர்ந்து, மொத்தம் $128.466 பில்லியன் என்ற அளவை எட்டியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author