நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயிலில் பதிகம் பாடி கதவு திறக்கும் ஐதீக நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது.
அப்பரும், சம்பந்தரும் தேவார பதிகம் பாடிதால் திருக்கதவு திறந்தது என்ற வரலாற்று சிறப்பு இந்த கோயிலுக்கு உள்ளது.
இந்த நிகழ்வை நினைவுகூறும் வகையில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கதவிற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
தொடர்ந்து தேவார பதிகம் பாடி கதவு திறக்கப்பட்ட நிலையில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்
