இந்தியா – அமெரிக்கா இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை செயல்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே 500 பில்லியன் டாலர் அளவிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்துவது குறித்து வாஷிங்டனில் பிப்ரவரி 23-ம் தேதி முக்கிய கூட்டம் நடைபெறவிருந்தது. இந்நிலையில் டிரம்ப்பின் வரி விதிப்பு குறித்த அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பை தொடர்ந்து, பேச்சுவார்த்தைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
