இந்தியாவின் தொழில்நுட்ப இலக்கு குறித்து முக்கிய அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஆகஸ்ட் 23) அன்று தி எகனாமிக் டைம்ஸ் உலகத் தலைவர்கள் மன்றத்தில் பேசும்போது வெளியிட்டார்.
அதன்படி, 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நாட்டின் முதல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட Made in India செமிகண்டக்டர் சிப் சந்தைக்கு வரும் என்று அவர் அறிவித்தார்.
மேலும், இந்தியா இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 6ஜி நெட்வொர்க்கை விரைவாக மேம்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
கடந்த 50-60 ஆண்டுகளில் செமிகண்டக்டர் உற்பத்தியில் ஏற்பட்ட வாய்ப்புகளை இந்தியா தவறவிட்டதை ஒப்புக்கொண்ட மோடி, “இன்று நாங்கள் இந்த சூழ்நிலையை மாற்றியுள்ளோம்.
செமிகண்டக்டர் தொடர்பான தொழிற்சாலைகள் இந்தியாவில் வரத் தொடங்கியுள்ளன” என்று தெரிவித்தார்.
2025 இறுதிக்குள் முதல் Made in India செமிகண்டக்டர் சிப்; மோடி அறிவிப்பு
