தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை, பாரதிய ஜனதா கட்சியிலிருந்து முழுமையாக விலகும் தனது இறுதி முடிவை டெல்லி மேலிடத்திடம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினை நேரில் சந்தித்த அண்ணாமலை, தனது விலகலுக்கான காரணங்களை விளக்கி 5 பக்கங்கள் கொண்ட விரிவான ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துள்ளார்.
அண்ணாமலை தனது கடிதத்தில், கடந்த நான்கு ஆண்டுகளாகத் தனக்கு மாநிலத் தலைவர் பொறுப்பு வழங்கிய மத்திய தலைமைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், கட்சியில் தான் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
2024 மக்களவைத் தேர்தலில் 11 சதவீதமாக இருந்த பாஜகவின் வாக்கு வங்கி, அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வெறும் 3 சதவீதமாகச் சரிந்ததை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமித் ஷா தடுத்தும் அண்ணாமலை பிடிவாதம்? பாஜவிலிருந்து விலகி ‘விஜய்’ பாணியில் பயணம்?
