அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஆந்த்ரோபிக் ஏஐ நிறுவனத்தின் தொழில்நுட்பங்களை அனைத்து மத்திய அரசு ஏஜென்சிகளும் உடனடியாகப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள அவர், “அமெரிக்காவிற்கு ஆந்த்ரோபிக் தொழில்நுட்பம் தேவையில்லை, அதை நாங்கள் விரும்பவில்லை” என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, பாதுகாப்புத் துறை போன்ற முக்கிய துறைகளில் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை அடுத்த ஆறு மாதங்களுக்குள் முழுமையாக நிறுத்த வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தடை: அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு
