சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 4ஆவது கூட்டத்தொடர், பல்வேறு நிகழ்ச்சி நிரல்களை வெற்றிகரமாக நிறைவேற்றி, மார்ச் 11ஆம் நாள் முற்பகல், பெய்ஜிங் மாநகரில் நிறைவடைந்தது. ஷிச்சின்பிங் உள்ளிட்ட கட்சி மற்றும் நாட்டின் தலைவர்கள் இக்கூட்டத்தொடரின் நிறைவுக் கூட்டத்தில் பங்கெடுத்தனர். சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தலைவர் வாங் ஹூநிங் இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்.
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் பல்வேறு நிறுவனங்களும், உறுப்பினர்களும், ஷி ச்சின்பிங்கை மையமாக கொண்ட சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியுடன் ஒன்றிணைந்து, கூட்டாக பாடுபட்டு, சீன பாணியுடைய சோஷலிச பாதையில் ஊன்றி நின்று, சீன பாணி நவீனமயமாக்கத்தின் மூலம் வல்லரசு கட்டுமானத்திற்கும் தேசிய மறுமலர்ச்சிக்கும் மேலதிக பங்காற்ற வேண்டும் என்று இக்கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்தன.
