லெபனானில் உள்ள காஸ்மியா பாலம் மீது வான் வழி தாக்குதல்!

Estimated read time 0 min read

லெபனானில் உள்ள காஸ்மியா பாலம் மீது இஸ்ரேல் விமானப்படை வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் 24 நாட்களை எட்டியுள்ளது. ஈரான் மீதும் லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்தும் இருநாடுகளும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

அந்த வகையில் தெற்கு லெபனானில் லித்தானி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள காஸ்மியா பாலம் மீது இஸ்ரேல் விமானப்படை குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தப் பாலம் தகர்க்கப்பட்டதன் மூலம், ஹிஸ்புல்லா அமைப்பினர் தெற்கு லெபனானுக்கு ஆயுதங்களை கொண்டு செல்வது தடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் தெற்கு லெபனானில் உள்ள கிராமங்களுக்கு தேவையான உணவு மற்றும் மருத்துவ பொருட்கள் விநியோகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author