மனித விண்வெளிப் பயண வரலாற்றில் கடந்த 60 ஆண்டுகளில் ஒருபோதும் நிகழாத ஒரு அதிரடி நடவடிக்கையை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா மேற்கொண்டுள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த மூத்த விண்வெளி வீரர் ஒருவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, அவரது பணிக்காலம் முடிவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே அவர் அவசரமாகப் பூமிக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் விண்வெளியில் மனித உடலுக்கு ஏற்படும் மர்மமான பாதிப்புகள் குறித்த புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
விண்வெளியில் திடீர் மருத்துவ அவசரநிலை: பாதியிலேயே பூமிக்குத் திரும்பிய நாசா விண்வெளி வீரர்
