பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை அழிக்க வெறும் 23 நிமிடங்கள் தான்: ராஜ்நாத் சிங்  

Estimated read time 0 min read

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பூஜ் விமானப்படை நிலையத்திற்கு வருகை தந்தபோது, இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வெற்றியைப் பாராட்டினார்.
அப்போது, இந்திய விமானப்படை பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை வெறும் 23 நிமிடங்களில் அழித்ததாகக் கூறினார்.
விமானப்படை வீரர்களிடையே உரையாற்றிய ராஜ்நாத் சிங், 1965 போருக்கு இணையாக, பாகிஸ்தானுக்கு எதிரான நமது வெற்றியை பூஜ் மீண்டும் கண்டுள்ளது என்று கூறினார்.
இந்திய விமானப்படையின் வீரம் மற்றும் தொழில்நுட்பத் திறமையைப் பாராட்டிய அவர், “பாகிஸ்தான் கூட பிரம்மோஸின் சக்தியை ஒப்புக்கொள்கிறது.
அது அவர்களுக்கு இரவை பகலாக மாற்றியது.” என்று மேலும் கூறி, இந்தியாவின் வளர்ந்து வரும் பாதுகாப்புத் திறன்களை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author