யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. ஈரானின் நிபந்தனைகளுக்கு தலையசைத்த அமெரிக்கா

Estimated read time 0 min read

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே 40 நாட்களாக நீடித்த போர் தற்போது தற்காலிக முடிவுக்கு வந்துள்ள நிலையில், இது அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. பில்லியன் கணக்கான டாலர்களைச் செலவழித்தும் அமெரிக்காவால் ஈரானை வீழ்த்த முடியாமல், இறுதியில் ஈரானின் நிபந்தனைகளுக்குப் பணிந்து டொனால்ட் டிரம்ப் ஒப்பந்தம் செய்திருப்பது அந்நாட்டிற்குள்ளேயே விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

குறிப்பாக, செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க வேண்டும் என்ற தனது முதல் நிபந்தனையிலிருந்து அமெரிக்கா பின்வாங்கியுள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்த இனி ஈரான் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் நிலைக்கு அமெரிக்கா சம்மதித்திருப்பது, ஈரானின் பிடி அந்தப் பிராந்தியத்தில் வலுவடைந்துள்ளதைக் காட்டுகிறது.

பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அமெரிக்கா இந்தப் போரில் பெரும் சவால்களைச் சந்தித்தது. போருக்கான செலவுகள் அதிகரித்ததாலும், ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாததாலும், தனது நட்பு நாடுகளுடன் கலந்தாலோசிக்காமலேயே அவசர அவசரமாக அமெரிக்கா இந்த அமைதி ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டது.

இதனால் அமெரிக்காவின் போர் அச்சுறுத்தல் இனி ஈரானிடம் பலிக்காது என்றும், இது ஒரு வகையான சரணடைதல் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மொத்தத்தில், கடுமையான போருக்குப் பிறகு ஈரான் தனது நிபந்தனைகளை அமெரிக்காவை ஏற்க வைத்திருப்பது, சர்வதேச அரசியலில் ஈரானின் கையை ஓங்கச் செய்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author