புதுச்சேரியில் விறுவிறுப்பாகத் தொடங்கிய தேர்தல் வாக்குப் பதிவின் போது, வ.உ.சி. அரசுப் பள்ளி வாக்குச்சாவடியில் ஒரு புதுமையான காட்சி அரங்கேறியது.
அங்கு வாக்காளர்களை வரவேற்க மனிதர்களுக்குப் பதிலாக ‘நிலா’ என்ற பெயருடைய ரோபோ நிறுத்தப்பட்டிருந்தது.
அழகான ஆடை அணிந்து, கையில் பூக்கள் அடங்கிய தட்டுடன் நின்றிருந்த இந்த ரோபோ, வாக்காளர்களை இன்முகத்துடன் வரவேற்று ஜனநாயகக் கடமையாற்ற ஊக்கப்படுத்தியது.
இந்த நவீன முயற்சி குறிப்பாக முதல்முறை வாக்களிக்கும் இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
புதுச்சேரி வாக்குச்சாவடியில் ‘நிலா’ ரோபோவின் வரவேற்பு! கோயம்புத்தூர் நிறுவனம் உருவாக்கிய நவீன தொழில்நுட்பம்
