தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் உள்ள 500 மெகாவாட் திறன் கொண்ட புரோட்டோடைப் ஃபாஸ்ட் பிரீடர் ரியாக்டர் (PFBR), கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி இரவு 8.25 மணிக்குத் தனது முதல் ‘கிரிட்டிகாலிட்டி’ நிலையை எட்டியுள்ளது.
அதாவது, இந்த அணு உலை முதல் முறையாகத் தானாகவே தொடர்ச்சியான அணுக்கரு சங்கிலி வினையைத் தொடங்கியுள்ளது.
இதன் மூலம், ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக வணிக ரீதியிலான ஃபாஸ்ட் பிரீடர் ரியாக்டரை இயக்கும் உலகின் இரண்டாவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற வல்லரசு நாடுகள் பில்லியன் கணக்கான டாலர்களைச் செலவழித்தும் முடியாத ஒரு காரியத்தை இந்திய விஞ்ஞானிகள் சாதித்துக் காட்டியுள்ளனர்.
கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் சாதனை: அமெரிக்காவால் கூட முடியாததை இந்தியா சாதித்தது எப்படி?
