புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி விரைவில் தொடங்கப்படும் : அமைச்சர் வெங்கடரமணன் தகவல்!

Estimated read time 0 min read

புதிய ரேஷன் அட்டை வழங்கும் திட்டம் 2 அல்லது 3 வாரங்களில் தொடங்கப்படும் என உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூர் தொகுதியில் புதிதாக கட்டப்பட்ட பெண்களுக்கான நவீன உடற்பயிற்சிக் கூடத்தினை அமைச்சர் வெங்கடரமணன் திறந்து வைத்தார். அங்கு உடற்பயிற்சி செய்த அவர், அருகே உள்ள நடுநிலை பள்ளியின் சிறப்பு குழந்தைகளுக்கான விழுதுகள் மையத்திற்கும் சென்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநகராட்சி முழுவதும் பெண்களுக்கான பிரத்யேக உடற்பயிற்சி கூடங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும், உடற்பயிற்சி மையத்தை பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.

வழக்கறிஞர்கள் நியமனத்தில் பணம் வாங்கியதாக கூறுவது புனையப்பட்ட கதை எனவும் தெரிவித்தார்

You May Also Like

More From Author