ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களான ராகவ் சத்தா, அசோக் குமார் மிட்டல் மற்றும் சந்தீப் பதக் ஆகியோர் அக்கட்சியிலிருந்து விலகி, இன்று பாரதிய ஜனதா கட்சியில் (பாஜக) இணைந்தனர்.
டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தாங்கள் மாநிலங்களவையில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவுடன், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி பாஜகவில் இணைவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
இந்த அரசியல் நகர்வு ஆம் ஆத்மி கட்சிக்கு மிகப் பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
அதிரடி திருப்பம்: பாஜகவில் இணைந்த ராகவ் சத்தா; ஆம் ஆத்மி கட்சிக்கு சரிவு
