கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

Estimated read time 0 min read

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்ததால் வெப்பம் நீங்கி குளுமையான சூழல் நிலவியது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில்

கன்னியாகுமாரி மாவட்டத்தில் குலசேகரம், திருவட்டார், மார்த்தாண்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் நேற்று இடி மின்னலுடன் மழை பெய்தது.

இதனால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. ஒருசில இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

இதேபோல் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. சில நாட்களாக கோடை வெயில் கொளுத்திய நிலையில் திடீர் மழையால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author