ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பசுமை மற்றும் தொடரவல்ல வளர்ச்சி மன்றத்துக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 29ஆம் நாள் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பசுமை மற்றும் தொடரவல்ல வளர்ச்சி மன்றத்துக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார்.
அதில் ஷிச்சின்பிங் குறிப்பிடுகையில், உயிரின சுற்றுச்சூழலை முன்னிறுத்தும் பசுமை வளர்ச்சிப் பாதையில் சீனா ஊன்றி நிற்கிறது. உலக சூழலியல் நாகரிக கட்டுமானத்தின் கலந்து கொள்பவர், பங்களிப்பாளர் மற்றும் முன்னோடியாகச் சீனா விளங்குகிறது என்றார்.
மேலும், பல்வேறு தரப்புகளுடன் இணைந்து “ஷாங்காய் எழுச்சி”யை பரவல் செய்து உலக சுற்றுசூழல் நிர்வாக அமைப்பு முறையின் மேம்பாட்டை முன்னேற்றி தூய்மையான, அழகான மற்றும் தொடரவல்ல உலகைக் கூட்டாக கட்டியமைக்கச் சீனா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
