9வது டிஜிட்டல் சீனா உச்சிமாநாடு ஏப்ரல் 29ஆம் நாள் ஃபூசோ நகரில் துவங்கியது.
நடப்பு உச்சிமாநாட்டில், செயற்கை நுண்ணறிவு புத்தாக்கத்தை முன்னேற்றுதல் உள்ளிட்ட 5 காட்சி பகுதிகள் அமைக்கப்பட்டன. தொழிற்துறை, மக்களின் வாழ்வாதாரம் உள்ளிட்ட துறைகளில் தரவுகளின் புதிய பயன்பாடுகள் காட்சிக்கு வைக்கப்பட்டன.
2025ஆம் ஆண்டு டிஜிட்டல் சீனா வளர்ச்சி அறிக்கை, டிஜிட்டல் சீனா வளர்ச்சி குறியீடுகள், 2025ஆம் ஆண்டு தேசிய தரவு வளம் பற்றிய ஆய்வு அறிக்கை உள்ளிட்ட டிஜிட்டல் சீனா உருவாக்கம் பற்றிய சாதனைகள் மற்றும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் நடப்பு உச்சிமாநாட்டில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
