கசான் நகரில் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்ற சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அக்டோபர் 23ஆம் நாள் மாலை ஈரான் அரசுத் தலைவர் பெசேஷ்கியைச் சந்தித்துரையாடினார்.
இச்சந்திப்பின் போது ஷிச்சின்பிங், முக்கியப் பிரதேசம் மற்றும் சர்வதேச செல்வாக்கு வாய்ந்த நாடு ஈரான் ஆகும் எனக் குறிப்பிட்டார். மேலும், ஈரான் தரப்புடன் இணைந்து பல்வேறு துறைகளின் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி இரு நாட்டின் பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவின் சுகமான நிலையான வளர்ச்சியை முன்னேற்றச் சீனா விரும்புவதாகும் அவர் குறிப்பிட்டார். அதோடு, ஈரான் முதன்முறையாக அதிகாரப்பூர்வ உறுப்பு நாடாகப் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்றதற்கு வாழ்த்து மற்றும் வரவேற்பு தெரிவித்த ஷிச்சின்பிங், பிரிக்ஸ் உள்ளிட்ட பல தரப்பு கட்டுகோப்புகளில் ஈரானுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தி தெற்குலகின் செல்வாக்கு மற்றும் கருத்து வெளிப்பாட்டு உரிமையை மேலும் உயர்த்தி சர்வதேச ஒழுங்கு மேலும் நீதியான நியாயமான திசையில் வளர்வதை முன்னேற்ற சீனா விரும்புவதாகவும் கூறினார்.
அதே நாள், ஓர் உறுப்பு நாடாக, எகிப்து பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் முதன்முறையாகப் பங்கெடுப்பதற்கு ஷிச்சின்பிங் வாழ்த்து தெரிவித்தார். எகிப்து அரசுத் தலைவர் அப்துல் ஃபடாஹ் அல்-சிசியுடன் சந்திப்பில் ஷிச்சின்பிங் கூறுகையில், இவ்வாண்டு, சீன-எகிப்து கூட்டாளி ஆண்டு மற்றும் இரு நாட்டின் பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவு நிறுவப்பட்ட 10ஆவது ஆண்டு நிறைவாகும். இதனை வாய்ப்பாகக் கொண்டு இரு தரப்பும், தொடர்ந்து ஒன்றுக்கொன்று ஆதரவளித்து, அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்தி, பயன் தரும் ஒத்துழைப்பை ஆழமாக்கி, இரு தரப்புறவை, புதிய யுகத்திற்கேற்ப சீன-எகிப்து பொது எதிர்கால சமூகக் கட்டுமானத்தை நோக்கி தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.