அந்தமான் நிகோபார் தீவுகளில் மத்திய அரசு செயல்படுத்தத் திட்டமிட்டுள்ள ₹81,000 கோடி மதிப்பிலான ‘மகா நிகோபார் பெருந்திட்டத்தை’, “நாட்டின் மிகப்பெரிய ஊழல்களில் ஒன்று” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகச் சாடியுள்ளார்.
கடந்த மூன்று நாட்களாக அந்தமான் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அவர், இன்று கேம்ப்பெல் பே (Campbell Bay) பகுதியில் பழங்குடியினத் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்.
மேம்பாடு என்ற பெயரில் பேரழிவு – அந்தமான் நிகோபார் திட்டத்திற்கு எதிராக ராகுல் காந்தி கண்டனம்!
