இந்தியக் காப்பீட்டுத் துறையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில், காப்பீட்டு நிறுவனங்களில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை ‘தானியங்கி வழிமுறை’ மூலம் மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கையை அரசு சனிக்கிழமை (மே 2) வெளியிட்டது.
இந்த மாற்றத்தின் மூலம் சர்வதேச அளவிலான முன்னணி காப்பீட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது கிளைகளைத் தொடங்கவும், உள்ளூர் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படவும் கூடுதல் வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
காப்பீட்டுத் துறையில் 100% அந்நிய நேரடி முதலீடு: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு
