காலியாக உள்ள ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் – இன்று தொடங்குகிறது வேட்பு மனுத்தாக்கல்!

Estimated read time 0 min read

தமிழகத்தில் காலியாக உள்ள ஒரேயொரு ராஜ்யசபா எம்பி பதவிக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

சட்டசபை தேர்தலின் போது மயிலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு சி.வி. சண்முகம் வெற்றி பெற்றார்.

தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தனது ராஜ்யசபா எம்பி பதவியை சி.வி.சண்முகம் ராஜினாமா செய்தார்.

சி.வி.சண்முகம் ராஜினாமா செய்ததால் அந்த ஒரு ராஜ்யசபா இடம் காலியானதாகவும், ஜுன் 18ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி ஜுன் 8ம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவித்தது.

ஜூன் 9ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் என்றும் ஜூன் 11ம் தேதி வேட்பு மனுவை திரும்ப பெற கடைசி நாள் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

தமிழகம் மட்டுமின்றி மஹாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, குஜராத் உள்பட 10 மாநிலங்களில் மொத்தம் 24 ராஜ்யசபா இடங்களுக்கு வரும் 18ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author