இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தற்பொழுது மே 18 முதல் 19 (2026) வரை இரண்டு நாட்கள் அரசுமுறைப் பயணமாக நார்வே நாட்டிற்குச் சென்றுள்ளார்.
இந்தியப் பிரதமர் ஒருவர் நார்வே மண்ணில் தடம் பதிப்பது கடந்த 43 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.
இதற்கு முன்னதாக 1983 இல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நார்வே சென்றதே இறுதியானதாக இருந்தது.
ஐரோப்பிய பாதுகாப்பு நெருக்கடிகளுக்கு மத்தியில் பிரதமரின் இந்த ஆஸ்லோ பயணம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உற்றுநோக்கப்படுகிறது.
43 ஆண்டுகளுக்குப் பிறகு நார்வே சென்ற முதல் இந்திய பிரதமர் மோடி
