“7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்” – இன்று மிக கனமழை பெய்யும்…. சென்னை வானிலை ஆய்வு மையம் அதிரடி எச்சரிக்கை….!! 

Estimated read time 0 min read

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக இன்று (மே 09) பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 7 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால், பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும், முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகக் கடலோரப் பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும், மற்ற மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author