
தமிழக அரசியல் களத்தில் அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், தவெக அமைச்சரவையில் திடீரென நடத்தப்பட்டுள்ள அதிரடி மாற்றம் அரசியல் வட்டாரத்தை தலைகீழாக உலுக்கியுள்ளது.
இதுவரை சீனியர் தலைவர் செங்கோட்டையன் வசம் பவர்ஃபுல்லாக இருந்த நிதித்துறை, தற்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் மரிய வில்சனுக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் பொறுப்பை இழந்த செங்கோட்டையனுக்கு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை புதிய பொறுப்பாக ஒதுக்கப்பட்டுள்ளது. “என்னப்பா நடக்குது அங்கே?” என அரசியல் விவாதங்கள் அனல் பறக்கும் வேளையில், தளபதியின் இந்த ‘திடீர் இலாகா மாற்றம்’ சமூக வலைத்தளங்களிலும், அரசியல் மேடைகளிலும் தற்போது பேசுபொருளாக மாறி உள்ளது.
