பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை மாலை தனது அமைச்சரவையுடன் நான்கரை மணி நேரக் கூட்டத்தை நடத்தினார்.
கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பிறகு நடைபெற்ற இக்கூட்டத்தில், எரிசக்திப் பாதுகாப்பு மற்றும் 2047-ஆம் ஆண்டுக்குள் ‘விக்ஷித் பாரத்’ (வளர்ந்த இந்தியா) என்ற இலக்கை அடைவதற்கான அரசின் உறுதிப்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், மேற்கு ஆசியாவில் நிலவும் போரினால் ஏற்படும் சவால்களுக்கு மத்தியில், பொருளாதாரம், விவசாயம் மற்றும் எரிசக்தி உள்ளிட்ட ஒன்பது முக்கியத் துறைகளின் பணிகளையும் இக்கூட்டம் ஆய்வு செய்தது.
எரிசக்தி, ‘விக்சித் பாரத்’ திட்டம் தொடர்பாக அமைச்சர்களுடன் மோடி 4 மணிநேர சந்திப்பு
