பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் புது டெல்லிக்கு பயணம் மேற்கொள்வார் என்று கிரெம்ளின் உதவியாளர் யூரி உஷாகோவ் செவ்வாயன்று உறுதிப்படுத்தினார்.
இது ஓராண்டில் புதின் மேற்கொள்ளும் இரண்டாவது இந்தியப் பயணமாகும்.
அவர் கடைசியாக கடந்த டிசம்பரில் நடைபெற்ற 23வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டிற்காக இந்தியா வந்திருந்தார்.
அப்போது , பல்வேறு முக்கியத் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்.
பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்காக புதின் செப்டம்பர் 12-13 தேதிகளில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்
