தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளிப்பதில்லை – அஷ்வினி வைஷ்ணவ் குற்றச்சாட்டு!

Estimated read time 0 min read

தமிழ்நாட்டில் ரயில்வே துறையில் முன்னேற்றம் ஏற்படாததற்கு, மாநில அரசின் ஒத்துழைப்பு இன்மையே காரணம் என, மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது வந்தே பாரத் ரயில் திட்டம் தொடர்பான திமுக எம்.பி. கலாநிதி வீராசாமியின் கேள்விக்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதிலளித்தார்.

அப்போது பேசிய அவர், தமிழ்நாடு, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் எந்த வளர்ச்சியும் ஏற்படாமல் இருப்பதற்கு, அம்மாநிலத்தை ஆளும் அரசுகள், மத்திய அரசுடன் ஒத்துழைப்பதில்லை என்று குற்றம் சாட்டினார்.

ரயில்வே துறையை பொறுத்தவரை அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும், ஆனால். நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட விஷயங்களில் தமிழ்நாடு, மேற்கு வங்க மாநிலங்கள் முரண்பாட்டை கடைபிடிப்பதாக குற்றம் சாட்டினார்.

You May Also Like

More From Author