மே 22ஆம் நாள் சர்வதேச பல்லுயிர் தினம். சீனாவில் வனப்பகுதியில் வாழும் அரிய உயிரினங்களின் எண்ணிக்கை தொடர்ந்து மீட்சியடைந்து வருவதாகவும், நாடு முழுவதிலும் உள்ள 200க்கும் மேற்பட்ட அரிய வகை மற்றும் அருகிவரும் காட்டு விலங்குகளின் எண்ணிக்கையில் மீட்பு சார்ந்த அதிகரிப்பு காணப்பட்டதாகவும், அழிவின் விளிம்பில் உள்ள 100க்கும் மேற்பட்ட வகை காட்டுத் தாவரங்கள் அவசரகால பாதுகாப்பைப் பெற்றுள்ளதாகவும் சீன தேசிய வனத்தொழில் மற்றும் புல்வெளி நிர்வாகம் வெளியிட்ட தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
15ஆவது ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில், தேசியப் பூங்காக்களை மையமாகக் கொண்ட இயற்கைப் பாதுகாப்புப் பகுதி அமைப்பு மற்றும் தேசியத் தாவரவியல் பூங்காக்களை வழிகாட்டலாகக் கொண்ட இடம்பெயர்தல் பாதுகாப்பு அமைப்பின் கட்டுமானத்தைச் சீனா தொடர்ந்து ஊக்குவித்து, காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களின் பாதுகாப்பை உயர்தரமாக முன்னேற்றி, சூழலியல் அமைப்பின் பன்முகத்தன்மை, நிலைத்தன்மை மற்றும் தொடர்ச்சித்தன்மையை தொடர்ந்து மேம்படுத்தும்.
