மாலத்தீவுடன் கரன்சி பரிமாற்ற ஒப்பந்தம் செய்தது ஆர்பிஐ  

Estimated read time 1 min read

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) திங்கட்கிழமை (அக்டோபர் 7) வெளியிட்ட ஒரு அறிக்கையில், சார்க் நாணய மாற்று கட்டமைப்பின் 2024-27இன் கீழ் மாலத்தீவு நாணய ஆணையத்துடன் (எம்எம்ஏ) நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்க டாலர்/யூரோ ஸ்வாப் விண்டோவின் கீழ் 400 மில்லியன் டாலர்கள் மற்றும் இந்திய ரூபாய் ஸ்வாப் விண்டோவின் கீழ் ரூ.3,000 கோடி நிதியுதவியை ஆர்பிஐ எம்எம்ஏவிற்கு வழங்க உள்ளது.
இந்த ஒப்பந்தம் ஜூன் 18, 2027 வரை செல்லுபடியாகும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author