சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, வரும் ஜூன் 6 ஆம் தேதி தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய கொங்கு மண்டல மலை மாவட்டங்களில் அன்றைய தினம் ஓரிரு இடங்களில் மிகக் கனமழை பெய்யக்கூடும்.
இவற்றுடன் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் குறிப்பிட்ட பகுதிகளில் பலத்த இடி மின்னலுடன் கூடிய கனமழை பதிவாக வாய்ப்புள்ளது.
ஜூன் 6 அன்று இந்த 5 மாவட்டங்களில் வசிப்பவர்கள் உஷார்! வானிலை மையம் விடுத்த திடீர் ‘ஆரஞ்சு அலர்ட்’!
