தமிழ்நாட்டில் காலியாக உள்ள ராஜ்யசபா எம்பி பதவியை கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு ஒதுக்கி தவெக தலைமை அறிவித்துள்ளது.
காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய்யை சந்தித்தார். அப்போது, மாநிலங்களவை இடைத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை காங்கிரசுக்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை ஏற்று முதலமைச்சரும், தவெக தலைவருமான ஜோசப் விஜய் காங்கிரசுக்கு ராஜ்யசபா எம்பி பதவியை வழங்குவதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில், வரும் 18ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் பிரவீன் சக்கரவர்த்தி ராஜ்யசபா எம்பியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
