பிலிப்பைன்ஸ் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் அவரது உறவினர்கள் மீதான தடைகள் குறித்து சீனக் கருத்து

பிலிப்பைன்ஸ் பாதுகாப்பு அமைச்சர் தியோடோரோ மற்றும் அவரது உறவினர்கள் மீது சீனா தடைகளை அறிவித்தது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் 12ஆம் நாள் கூறுகையில், பிலிப்பைன்ஸில் சீனாவுக்கு எதிரானவர்களில் தியோடோரோ பிரதிநிதித்துவம் வாய்ந்தவராவர். அவர் தனது பொறுப்பற்ற செயல்களால் தனக்கு தானே தீங்கு விளைவிப்பார். பிலிப்பைன்ஸ் மற்றும் அந்நாட்டு மக்களின் நலன்களும் இதனால் பாதிப்படையும். இத்தகைய நபர்களின் பொறுப்பற்ற செயல்களால்தான், சீனா-பிலிப்பைன்ஸ் இடையேயான சர்ச்சைகள் தீவிரமாவதோடு இருநாட்டு உறவும் மோசமடைந்துள்ளது என்று தெரிவித்தார்.

You May Also Like

More From Author