கர்நாடகாவுக்கு மறு அறிவிப்பு வரும் வரை அரசு பேருந்துகளை இயக்க வேண்டாம் என போக்குவரத்துக் கழகத்திற்கு கிருஷ்ணகிரி காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேகதாது அணை விவகாரத்தை ஒட்டி, கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் இன்று கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதையடுத்து, தர்மபுரி மண்டல போக்குவரத்துக் கழக பொது மேலாளருக்கு கிருஷ்ணகிரி காவல்துறை கடிதம் அனுப்பி, மறு அறிவிப்பு வரும் வரை கர்நாடகாவுக்கு அரசு பேருந்துகளை இயக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக-கர்நாடக எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நிலைமையை காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
