தற்போது நடந்து வரும் ஃபிஃபா உலகக்கோப்பை 2026 தொடரில், முன்னணி நட்சத்திர வீரர்களின் கோல்களையும் ஆட்டங்களையும் தாண்டி ஒரு புதிய வரலாற்று சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
செக்கியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில், கால்பந்து உலகக்கோப்பை வரலாற்றிலேயே முதன்முறையாக ஒட்டுமொத்த கள நடுவர்களும் பெண்களாக மட்டுமே கொண்ட ஒரு குழு ஆட்டத்தை வெற்றிகரமாக வழிநடத்தியுள்ளது.
தலைமை நடுவர் டோரி பென்சோ, உதவி நடுவர்கள் புரூக் மாயோ மற்றும் கேத்ரின் நெஸ்பிட் ஆகிய மூவர் அடங்கிய இந்த பெண் நடுவர்கள் குழு இச்சாதனையைப் படைத்துள்ளது.
ஒட்டுமொத்த கால்பந்து உலகையும் திரும்பிப் பார்க்க வைத்த வரலாற்றுத் தருணம்
